Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடியில் நள்ளிரவில் சொத்து பிரச்சனைக்காக வாலிபர் வெட்டிக்கொலை .

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர்.

தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்
(வயது50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் முதல் மனைவி பொன்னி. இவருக்கு யுவராஜ்(22) மற்றும் ஒரு தங்கை உள்ளனர். தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது. முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக மங்கை என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளது.இவரும் இறந்து விட்டார். மூன்றாவதாக லால்குடி அருகே பல்லபுரத்தைச் சேர்ந்த பூமதியை திருமணம் செய்து இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மஞ்சள் காமாலை நோயால் கௌதமன் இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தை பார்த்து வந்த வேலையை யுவராஜ் செய்துவந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தச்சங்குறிச்சி பொதுத்தமிழ் சாலையில் உள்ள சாலையில் ஒரு பண்ணை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜை வெட்டி படுகொலை செய்து உள்ளனர்.

இந்த தகவல் அறிந்து கணக்கியநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் பூமதியின் அண்ணன் சின்னராசு அவரது மகன் வல்லரசு ஆகியோர் சொத்துக்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.