Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: மாப்பிள்ளையின் போதைப் பழக்கத்தை அறிந்து திருமணத்தை நிறுத்தியதால் மணமகளின் தாயாரை தாக்கிய நபர் கைது.

0

'- Advertisement -

திருச்சி:
மாப்பிள்ளையின் போதை பழக்கத்தை அறிந்து திருமணத்தை நிறுத்தியதால் பெண்ணின் தாயை தாக்கிய பிரியாணி மாஸ்டர் கைது.


திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் (வயது 42).இவர் அந்தப் பகுதியில் சேலை மற்றும் நைட்டி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அம்ஜத் அலி (வயது 23) பிரியாணி மாஸ்டர்.இவருக்கு அசீனா பேகத்தின் மகளை திருமணம் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் 2 மாதத்துக்கு முன்பு போதை ஊசி மற்றும் கஞ்சா அடித்துக் கொண்டு அஜ்மத் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அசினா பேகம் அவரை கண்டித்தார். பின்னர் மகளை திருமணம் செய்து வைக்கும் முடிவை கைவிட்டார்.

மேலும் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்த நிலையில் அஜ்மத்தின் பெற்றோர் மகனுக்கு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துள்ளனர்.

அப்போது அஜ்மத்தின் போதைப் பழக்கம் அறிந்து அவர்களும் மறுத்துவிட்டனர்.
இதனால் அஜ்மத்துக்கு அசினா பேகம் மீது சந்தேகம் ஏற்பட்டது. தன்னுடைய போதை பழக்கத்தை அவர் அண்ணா நகரில் உள்ள பெண் வீட்டாரிடமும் தெரிவித்து இருக்கலாம் என கருதிய அவர் போதையில் மீண்டும் அசினா பேகத்தின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தார்.
பின்னர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அசினா பேகத்தை கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து அசினா பேகம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அக்மத் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.