
திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (வயது 24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 7-வது கிராசில் நிறுத்தி இருந்தார் .இந்த வாகனம் திருட்டு போனது. இது குறித்து பாலக்கரை போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார் . இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் புலிவலத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் அந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்திபன் மீது திருவாரூர், நாகப்பட்டினத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

