திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற
பெண்ணின் 7 பவுன் தாலி செயின் பறிப்பு.
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர்.இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் விசேஷத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்களை வழியனுப்பதற்காக கண்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் சென்றார். பின்னர் உறவினர்களை ரெயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் சென்னை பைபாஸ் சாலை காவேரி பாலத்தின் அருகாமையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து கண்ணன் கோட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.