
மகா சிவராத்திரியை முன்னிட்டு
மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில் திருவானைக்காவலில் 4 நாட்கள் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நாள் மஹாகணபதி ஹோமம், திவ்யநாம சங்கீர்த்தனம், ஊஞ்சல் உற்சவம்,
2ம் நாள் ருக்மணி திருக்கல்யாண வைபவம், பாகவத ஆராதனை, சிவபூஜை, 3ம் நாளான நேற்று தேவரா இன்னிசை, சிவதரங்கம், மூவர்தேவராம், சிவபூஜை, சிவதிவ்யநாம சங்கீர்த்தனம், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4ம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபம், சிவ நாமசங்கீர்த்தனம், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

