திருச்சியில் தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை .
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிஷோர் (வயது 24)வேன் டிரைவர். அண்மையில் இவரது தாய் இறந்து விட்டார்.
இந்த நிலையில் சோகத்தில் இருந்த கிஷோர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் இருந்த விட்டதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்க அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.