Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரண்டு நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர்.

0

'- Advertisement -

 

திருச்சியில்

டாஸ்மாக் பார் ஊழியர் உட்பட இரண்டு பேரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு.

2 பேர் கைது.

கரூர் பெரிய குளத்துப்பாளையம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 48). இவர் திருச்சி சுந்தர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அங்கு நின்று கொண்டிருந்த ஜான் பாஷாவிடம் கத்தி முனையில் மிரட்டி இரண்டு பேர் பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 40 )..மன்னார்புரம் காஜா நகரை சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 20 )ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவில் நடந்து சென்ற ரவிச்சந்திரன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்ததாக திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சிவகுரு, உறையூரை சேர்ந்த அருண்குமார் ஆகிய இரண்டு வாலிபர்களை உறையூர் போலீசார் கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.