Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மூன்று பேர் சாவு.

0

'- Advertisement -

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மாணவர் உட்பட 3 பேர் சாவு.

திருச்சி இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51 )விவசாயி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்தது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆவாரங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கல்லக்குடி அருகே உள்ள கீழரசு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 28) என்ற வாலிபரை பாம்பு கடித்தது. அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை விடாதிலம்பட்டி பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவன் மணிகண்டனை பாம்பு கடித்தது அந்த மாணவன் அருகாமையில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவனைப் பாம்பு கடித்தது. அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் இறந்தார்.
ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் பாம்பு கடிக்கு மூன்று பேர் இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.