திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி
மண்டலம் 5 -ன் வார்டுகுழு கூட்டம்
கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் கோ-அபிஷேகபுரம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
.உதவி கமிஷனர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், முத்துக்குமார், சுரேஷ்குமார், விஜயலட்சுமி சரவணன், நாகலட்சுமி, பங்கஜம், உதவி வருவாய் அலுவலர் துரை, சுகாதார அலுவலர் இளங்கோ, இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், ஆல்பர்ட், ரவிக்குமார்,நிர்வாக அலுவலர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டலம் ஐந்திற்கு உட்பட்ட வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.