Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனவிரக்தியில் இருந்த திருச்சி ஆடிட்டர், ரயில் நிலையம் முன் தீக்குளித்து பரிதாப சாவு.

0

'- Advertisement -

 

திருச்சி ரயில் நிலையத்தில் ஆடிட்டர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ் (வயது 36). ஆடிட்டர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் புது பஸ் நிலையம் அருகில் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் சுகன்யா (வயது 30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமுல்ராஜ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவி ரோஸ்லின் சுகன்யா தனியாக பிரிந்து தாய் வீட்டில் சென்று வசித்து வருகிறார்.

இதற்கிடையில் அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த ஆடிட்டர் அமல்ராஜ் சம்பவத்தன்று திருச்சி ரயில் நிலையம் நுழைவாயில் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகி அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.