Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகம் முழுவதும் வரும் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

0

'- Advertisement -

 

நவம்பர் 3ம் தேதி
தமிழகம் முழுவதும்
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார்.

துணை பொது செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒன்றிய அரசு அறிவுத்துள்ளவாறு 1 .7. 2022 முதல் 4 சதவிகித அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு தனது ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் பற்றி வரும் நவம்பர் 3ஆம் தேதி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநில பொருளாளர் மத்தேயு நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.