ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
இன்று ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 82 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, சுப்ரமணியபுரம் எட்வின், அணித்தலைவர்கள் சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தின், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரபாகரன்,
மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், வார்டு நிர்வாகிகள் சரவணன், பாண்டியன், கண்ணன், ரவிச்சந்திரன், வடிவேல், பூபாலன், மார்ட்டின்,ஞானம், வளன் ரோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

