லால்குடி அருகே டி .வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லால்குடி அருகே உள்ள டி. வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக கடந்த 29 ம் தேதி (திங்கள்கிழமை) காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான நேற்று காலை இரண்டாம் கால யாகசான பூஜைகள் நடைபெற்று.
அதனையொட்டி சிவாச்சாரியார்களால் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கும்பாபிஷேகத்திற்க்கான ஏற்பாடுகளை கிராம பட்டையத்தாரர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

