திருச்சியில்
வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 ந் தேதி வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்து கட்டிலுக்கு கீழே இருந்த ரூபாய் 20 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு சென்று உள்ளனர். இதுகுறித்து பாலக்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதி சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்து உள்ளனர்.

