திருச்சி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா

தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் தலைவர் கல்யாண்குமார் தலைமையில் விழா நடைபெற்றது.
பொதுச் செயலாளர் மதன்குமார் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். விழ வில்
திருச்சி மாவட்ட ஐ.என். டி. யு. சி. தலைவர் வெங்கட்நாராயணன்,
சங்கத்தின் செயல் தலைவர் ஆனந்த், பொருளாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நிர்வாகத்திடம் இருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

