திருச்சியில் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (வயது 56).
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அரசு ஊழியர் இணைந்து, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயத்திற்காக ”வாட்ஸ்அப் குரூப்’ ஒன்று உருவாக்கியுள்ளனர். இந்த குரூப்பில் பெண்கள் குறித்த அவதூறான ஆபாச வீடியோ ஒன்று பரவியதாக கூறப்படுகிறது. இது அந்த குரூப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்த திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஆபாச வீடியோவை பரப்பியவர் யார் என விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாநகர போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவை குரூப்பில் ஷேர் செய்தது எஸ்எஸ்ஐ செந்தாமரை கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து எஸ்.எஸ்.ஐ செந்தாமரை கண்ணனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளர்.

