திருச்சி அருகே விபத்து
சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு .
யார் அவர் ?போலீசார் விசாரணை .
திருச்சி மாத்தூர் ரிங் ரோடு அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இந்த விபத்தில் இறந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
விபத்தில் இறந்த மூதாட்டியை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக மாத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

