2026 புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
2026 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மலேசியத் தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் அவர்களின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது .

மேலும் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழி விடு வேல் முருகன் கோவில் அருகே சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த வருடமும் அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த அன்னதானத்தை அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் திருச்சி மாவட்ட பொது செயலாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் விஷ்ணுப்ரியா பழனிவேல்,
அதிமுக 55 வது வட்ட கழக செயலாளர்
M. கணேஷன்,
கருப்பையா ஹோட்டல் ராமசாமி, மணி,
பார்வர்டு பிளாக் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பாலக்கரை பழனிவேல், வேலன் மொபைல்ஸ் முருகேஷன் ,
புவனேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

