Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விதி எப்படி எல்லாம் முடியுது? நடந்து சென்ற பெண்ணின் மீது…. பரிதாப பலி .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.

 

Ad banner

தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (வயது 50) என்பவா் அரங்கூா் பேருந்து நிறுத்தம் அருகில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். சம்பவத்தன்று அவரது கணவரை காய்கறி கடையில் விட்டு விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா்.

TVK ad

அப்போது சாலையில் உள்ள புளிய மரத்தின் கிளை முறிந்து அவரது மேல் விழுந்துள்ளது. இதில், பலத்த காயத்துடன் இருந்தவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், நிா்மலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். தகவலின்பேரில் தொட்டியம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.