Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடமலைப்பட்டிபுதூரில் பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை . காரணம்….

0

'- Advertisement -

எடமலைப்பட்டி புதூரில்

பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை .

திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) .

 

இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலையில் வேலைக்கு செல்லவில்லை பெற்றோரிடம் தலை வலிப்பதாக கூறியுள்ளார் பின்னர் அவரது தாயார் தேவி அவருக்கு தலைவலி மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார் அதை சாப்பிட்டு ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று உள்ளார்.

பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது சந்தியா வீட்டின் அருகில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

பின்னர் இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் இடம் தகவல் கொடுத்தார் தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார்

விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

 

தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை . இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.