முன்னாள் காதலனின் பேண்டை கழட்டி ஆணுறுப்பை மிதித்து இந்நாள் காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த 17 வயது சிறுமி .
பெங்களூரு பாகலகுண்டே அருகே உள்ள மஞ்சுநாத் லேஅவுட் குதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான குஷால் (வயது 19).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் குஷாலுடனான காதல் உறவை அந்த மைனர் சிறுமி முறித்துக் கொண்டார். பின்னர் அவர் வேறு ஒரு இளைஞரை காதலிக்க தொடங்கினார். இந்தக் காதல் விவகாரம் சிறுமியின் முன்னாள் காதலரான குஷாலுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமிக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வீட்டில் அவரின் காதல் விவகாரம் பற்றி கூறி விடுவேன் என குஷால் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி, அவரது தற்போதைய காதலர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து தனியாக பேச வேண்டும் என குஷாலை சிறுமி அழைத்திருக்கிறார்.
இதனை அடுத்து கடந்த ஜூன் 30-ம் தேதி ஏஜிபி லேஅவுட் பகுதிக்கு குஷால் மதியம் 2.30 மணி அளவில் வந்தார். அப்போது சிறுமி 7 பேருடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஹேமந்த் என்ற இளைஞர் குஷாலிடம் அவரது ஃபோனில் இருந்து சிறுமியின் புகைப்படங்களை அழித்து விட வேண்டும் என மிரட்டி இருக்கிறார். ஆனால் தனது போனை வீட்டிலேயே வைத்து விட்டதாக கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அவரை அடித்து தாக்கத் தொடங்கினர். அப்போது அழுது கொண்டே குஷால் சிறுமியிடம் கெஞ்சி இருக்கிறார். இருந்தபோதிலும் அவர்கள் குஷாலை காரில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்து போனை எடுத்து வரச் செய்த அவர்கள் மீண்டும் குஷாலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கூட்டிச்சென்று அவரது ஃபோனில் இருந்த அனைத்து புகைப்படங்களையும் அழித்துவிட்டு குஷாலிடம் ஃபோனை கொடுத்து இருக்கின்றனர்.
இதன் பின்னர் குஷாலின் சட்டை, பேண்ட் ஆகியவற்றை கழட்டி அவரை அரை நிர்வாணப்படுத்தி அருகில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து 7 பெரும் குஷாலை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அடிக்க தொடங்கினர்.
மேலும் குஷாலின் மர்ம உறுப்பிலும் அவர்கள் காலால் உதைத்து சித்திரவதை செய்தனர். தன்னை விட்டு விடும்படி குஷால் கெஞ்சியதற்கும் அவர்கள் மனம் இறங்கவில்லை. தனது முன்னாள் காதலியின் காலை பிடித்து இனி இது போல் செய்ய மாட்டேன், உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், என்னை மன்னித்துவிடு என குஷால் கெஞ்சியபோதும் அந்த மைனர் சிறுமி குஷாலை தாக்கும் படி தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அதன் பெயரில் அவர்கள் குஷாலை சகட்டுமேனிக்கு தாக்கினார். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.
பின்னர் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய அவர்கள், குஷாலை விடுவித்தனர். இதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட குஷால் நடந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் குஷாலின் முன்னாள் காதலியான 17 வயது மைனர் சிறுமி, ஹேமந்த் யஷ்வந்த், சிவசங்கர், சசாங், மைனர் சிறுவர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஷாலை தாக்கிய அந்த நபர்களே அவரை தாக்கும் போது எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டது தெரியவந்துள்ளது..