Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேற்றில் சிக்கிய பசு மாட்டினை மீட்ட திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர்.

0

'- Advertisement -

திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத் துறையினா் நேற்று சனிக்கிழமை மீட்டனா்.

Ad banner

திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதாக, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

TVK ad

அதன் பேரில், தகவலறிந்த திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சேற்றில் சிக்கிய பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் நா. மோகன்குமாா் வளா்க்கும் புறாக்களின் முட்டைகளை சாப்பிட வந்த 6 அடி நீள நல்ல பாம்பை நேற்று சனிக்கிழமை பிடித்த தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் பாம்பை விட்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.