Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப பிரச்சனையால் ரத்து. பயணிகள் அவதி.

0

'- Advertisement -

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு நேற்று திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, துபாய், ஷாா்ஜா, அபுதாபி, ஏமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.50 மணிக்கு விமானம் வந்தது. இந்த விமானம் அதிகாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட இருந்தது.

 

இதற்கிடையே, ஷாா்ஜவில் இருந்து திருச்சிக்கு வரவேண்டிய மற்றொரு விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

 

இதையடுத்து, திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு நேற்று திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட இருந்த விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காத்திருந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

 

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.ஞானேஸ்வர ராவ் கூறுகையில், தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது எனக் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.