திருச்சி மாவட்டத்தில்
கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட
22 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

டி.ஐ.ஜி வருண் குமார் உத்தரவு.
திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்திலிருந்து ஆர். அம்சவேணி கரூர் மாவட்டத்துக்கும்,. சமயபுரத்திலிருந்து ஏ. விரமணி முசிறிக்கும், அங்கிருந்து ஜெ. மணிவண்ணன் துவாக்குடிக்கும் (இவர் ஏற்கெனவே பொறுப்பு ஆய்வாளராக உள்ளார்), மணப்பாறையிலிருந்து சி. ரகுராமன் சமயபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 22 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வெளியிட்டுள்ளார்.