ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா .
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
ஜாதி வாரி கணக்கெடுத்து, அனைத்து ஜாதியினருக்கும் அரசு வேலை கிடைக்க உதவிட வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணைத்தலைவர் மேகராஜன், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டக்காரர்கள் கூறினர். இறுதியில் முதல்வருக்கு கலெக்டர் மூலமாக மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.