Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்துக்காக கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள். திருச்சியில் பரபரப்பு சம்பவம்.

0

'- Advertisement -

திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .

 

திருச்சி

மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த

திமுக கவுன்சிலரும் திருச்சி மாவட்ட துணை செயலாளருமான முத்து செல்வம்.

இந்த பகுதியில் பொதுப் பாதை ஒன்று உள்ளது.

அதனை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் சொந்தம் கொண்டாடி வருவதாக

கூறப்படுகிறது.

39 வருடங்களாக நடைபெற்ற வந்த வழக்கின் முடிவில் நீதிமன்றம் அந்த நபருக்கு பொதுப் பாதை சொந்தம் இல்லை என தீர்ப்பளித்தது.

இதையடுத்து

முத்து செல்வம் அந்த பகுதியில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பில் உள்ள முத்தையாவின் மகள்கள் இருவரும் கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி

Suresh

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு முத்து செல்வத்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவதூறு பரப்பி வந்தனர் .

இந்த நிலையில் தன்னை

ஆபாச வார்த்தைகளால் திட்டிய பெண்கள் இருவர் மீதும் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியிடம் புகார் அளிக்க செல்ல உள்ளார் என்பதை அறிந்த அந்த வார்டு பொதுமக்கள்

சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் 300 பேர் அவருடன் திரண்டு வந்தனர்.

 

எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் அல்லது உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தால் போதும் என ஆணையர் கூறியதாக தெரிகிறது . இதனால் கமிஷனர் அவரை சந்திக்க மறுத்த நிலையில் 57 வது வார்டு பொதுமக்கள் அனைவரும் தங்களது கவுன்சிலருக்காக திருச்சி – புதுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது..

 

இதனைத் தொடர்ந்து வடக்கு குற்றப்பிரிவு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் முத்து செல்வத்திடம் மனு கொடுக்க நீங்கள் ஐந்து பேர் வந்தால் போதாதா இவ்வளவு இதை திரட்டி வருவீர்களா என கேட்டார் , அதற்கு அங்கு கூடி இருந்த பொதுமக்கள் அனைவரும் எங்கள் கவுன்சிலருக்காக நாங்கள்தான் திரண்டு வந்தோம் அவர் எங்களை அழைக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் , மேலும் இங்கிருந்து கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வேன் என கூறியதால் அனைவரும் எங்கள் கவுன்சிலருக்காக நாங்கள் கைதாகவும் தயார் என ஆவேசமாக கூறினார்கள் இதனால் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் காணப்பட்டது .

பின்னர் கவுன்சிலர் முத்து செல்வம் தனது பகுதி பொது மக்களை அனைவரையும் அமைதியாக இருங்கள் என கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார் . போலீசார் கூறி கேட்காத 57வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் முத்து செல்வம் கூறியவுடன் அமைதியாக கலைந்து சென்றனர் .

 

பின்னர் காவல்துறை அதிகாரிகள் கமிஷனர் காமினி அவர்களிடம் தனது மனுவை கொடுத்து திரும்பினார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உடனடியாக அந்த இரண்டு பெண்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.