திருச்சியில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார்

குடும்ப தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ந் தேதி வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இனதயடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.