Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .

0

திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம், வரி மற்றும் வரியில்லா இனங்களை ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தலாம். இதற்காக அந்தச் செயலிகளில் தமிழ்நாடு அா்பன் இசேவை முனிசிபல் டேக்ஸ் என்ற இணைப்பு உள்ளது. அதைப் பயன்படுத்தி செலுத்தலாம்.

இல்லையெனில், திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகம், 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் 65 வாா்டு குழு அலுவலகங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களில் நேரிலும் செலுத்தலாம். அனைத்து வரிகளையும் உரிய காலத்திற்குள் செலுத்தி அபராதத்தைத் தவிா்க்க வேண்டும் என ஆணையா் அறிவுறுத்தினாா்.

Leave A Reply

Your email address will not be published.