அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக் கூட்டங்கள் நடந்த முடிவு.
ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பூனாட்சி, ஜெ பேரவை இணை செயலாளர் செல்வராசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் மன்ற செயலாளர்
அறிவழகன் விஜய், மீனவரணி பேரூர் கண்ணதாசன், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், மாணவரணி அறிவழகன், பாசறை சோனா விவேக்,
மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி , வழக்கறிஞர் தேவா மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 24 ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது,
மேலும் வருகிற 25 26 27 28 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது ,
இளைஞர் இளம் பெண்கள் பாசறை கிளைகளை பூத் வாரியாக அமைப்பது ,
இளம் தலைமுறையினர் விளையாட்டு வீரர்கள் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.