திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் 33 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் . மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் பங்கேற்பு .
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும்
திருச்சி மாவட்டத்தில் 33 இடங்களில் இன்று அதிமுக மனித சங்கிலி போராட்டம்
மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி
,சீனிவாசன் பங்கேற்பு.
திமுக ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்டத்தில் பகுதி வாரியாக போராட்டம் நடந்தது.
மலைக்கோட்டை பகுதி சார்பில் மலைக்கோட்டை தபால் நிலையம் முதல் சென்னை சில்க்ஸ் வரையில் பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையிலும், காந்தி மார்க்கெட் பகுதி சார்பில் கமான் வளைவு முதல் பெரிய கடை வீதி கள்ளத்தெருவரையில் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமையிலும் ,பாலக்கரை பகுதி சார்பில் பாலக்கரையில் பகுதி செயலாளர் ரோஜர் தலைமையிலும், காஜா பேட்டை பகுதி சார்பில் காஜா பேட்டை பூங்கா அருகாமையில் பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையிலும், ஏர்போர்ட் பகுதி சார்பில் புதுக்கோட்டை ரோடு விமான நிலையம் எதிரில் பகுதிச் செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமையிலும், தில்லைநகர் பகுதியில் பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியில் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா தலைமையிலும், புத்தூர் பகுதி சார்பில் புத்தூர் பவானி ஹோட்டல் அருகில் பகுதி செயலாளர் புத்தூர் ராஜேந்திரன் தலைமையிலும், ஜங்ஷன் பகுதி சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகாமையில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமையிலும்,. வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையிலும்,
கருமண்டபம் பகுதி சார்பில் எடமலைப்பட்டி புதூர் தங்க ராஜா தியேட்டர் பகுதியில் பகுதி செயலாளர் கலைவாணன், உன்னால் பாராளுமன்றம் உறுப்பினர் ரத்னவேல் வட்ட செயலாளர் டி எஸ் எம் செல்வமணி ,தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மலைக்கோட்டை பகுதி சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வணக்கம் சோமு ,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக்,ஐடி பிரிவு வெங்கட்,முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன், டாஸ்மாக் பிளாட்டோ ,
இலியாஸ்,ஜெகதீசன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், சேது மாதவன் , முத்துமாரி, சசிகுமார், சுரேஷ் ஜெயராமன், கங்கை மணி, மற்றும்,எனர்ஜி அப்துல் ரகுமான், ராமநாதன், ஈஸ்வரன், சிங்க முத்து, ஈஸ்வரன், ரமணிலால், அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், பொன். அகிலாண்டம் உள்பட
ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர்
தெற்கு மாவட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது . மணப்பாறை நகராட்சி பகுதியில் நகரச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டார். மேலும் லால்குடி நகராட்சியில் பொன்னி சேகர் தலைமையிலும்,
துவாக்குடி நகராட்சியில் நகரச் செயலாளர் எஸ்.பி. பாண்டியன் தலைமையிலும், பொன்னம்பட்டி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் திருமலை சாமிநாதன் தலைமையிலும், பூவாளூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் ஜெயசீலன் தலைமையிலும் , புள்ளம்பாடி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் தலைமையிலும், கல்லக்குடி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் பிச்சை பிள்ளை தலைமையிலும்,
பொன்மலை பகுதியில் பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், திருவெறும்பூர் பகுதி சார்பில் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி சார்பில் தண்டபாணி ஆகியோர் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மணப்பாறை நகரத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர்
வடக்கு மாவட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவரங்கம் பகுதி, திருவானைக்காவல் பகுதி, முசிறி நகரம், துறையூர் நகரம், சிறுகமணி பேரூராட்சி, மண்ணச்சநல்லூர் பேரூராட்சி, ச.கண்ணனூர் பேரூராட்சி, தொட்டியம் பேரூராட்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி, மேட்டுப்பாளையம் பேரூராட்சி, தா.பேட்டை பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி, பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.திருவரங்கத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி மனோகரன் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன். செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பொருளாளர் மீனவரணி பேரூர் கண்ணதாசன் இலக்கிய அணி ஸ்ரீதர், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், ராஜகோபால், இளைஞர் அணி தேவா,பகுதி செயலாளர் சுந்தர்ராஜன் ,டைமன் திருப்பதி,நிர்வாகிகள் சமயபுரம் ராமு ,ரவிசங்கர், வி.என்.ஆர் செல்வம் ,தமிழரசன், திருப்புகழ் கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.