தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமும் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகமும், இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கையுந்துபந்து போட்டி 12.07.2024 மற்றும் 13.07.2024 ஆகிய தேதிகளில் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் பிரிவில் 20 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டன. 13.07.2024 மாலை 4.00 மணியளவில் நடந்த இறுதிப் போட்டியை சர்வதேச கையுந்துபந்து விளையாட்டு வீரர் J.நடராஜன், Manager, I.O.B தொடங்கி வைத்தார்.
மாணவியர்களுக்கான இறுதிப் போட்டியில் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியும், அரசு உயர்நிலைப்பள்ளி பூலாங்குடி அணியும் மோதின. இதில் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி அணி 25-10, 25-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும், எஸ்.எம்.
மேல்நிலைப்பள்ளி உறையூர் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி 24-26, 25-12, 25- 18 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடம் பெற்றது.
பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக செயலாளரும், முன்னாள் இந்திய கையுந்துபந்து விளையாட்டு வீரர் கோவிந்தராஜன் வரவேற்று பேசினார்.
திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக தலைவர் முனைவர் தங்க.பிச்சையப்பா தலைமை தாங்கினார். முனைவர் தர்மர், தலைவர், உடற்கல்வித்துறை தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக முனைவர் வி.ராஜூ அசோசியேட் டீன் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சதிஷ்குமார் அட்மின் ஆபிஸர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள்.
முடிவில் திருச்சி மாவட்ட
கையுந்துபந்து கழக பொருளாளர் சிவாஜி நன்றி உரை கூறினார்.