Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.

0

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி வந்தடைந்த அவருக்கு, திருச்சி மாமன்ற உறுப்பினரும். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவருமான அம்பிகாபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் விமான நிலையம் முன்பு திரண்டு செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். அம்பிகாபதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தார் .

இந்த நிகழ்வில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுயர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி. கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, சாலை வழி பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுக வில் இணையும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்ன்றார்.

திருச்சி விமானநிலையத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், மாணவர் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் , வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் , மாவட்டத் துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் , ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர், வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள் புங்கனூர் கார்த்தி , வழக்கறிஞர் தேவா, முன்னாள் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் , முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, மாணவரணி மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர் , நிர்வாகிகள் இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம் , பாலக்கரை ரவீந்திரன் உட்பட ஏராளமானோர் வரவேற்பு மற்றும் வழி அனுப்பும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.