ஜூன் 25ஆம் தேதி திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்றம் முழு விவரம்.
திருச்சி
திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஜூன் 25-ம் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே இந்த அலுவலகத்துக்கு ஜூன் 18-ம் தேதிக்குள் குறைகள் வந்து சேர வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும்

இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
குறை தீர்க்கும் முகாமில் சம்பந்தப்பட்ட கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட
தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
குறை தீர்க்கும் முகாமில் சம்பந்தப்பட்ட கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
குறைகளை, ‘திரு.ஜோ.பிரதீப்குமார், உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம் (தமிழ்நாடு), திருச்சி-620001’, தொலைப்பேசி எண்: 0431-2419523 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ‘அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் – ஜூன் 2024’ என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
முகாமில் நேரிலோ அல்லது வலைசெயலிகள் மூலமாகவோ உங்கள் வசதிக்கேற்ப பங்கேற்கலாம். எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் தி.நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.