Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.

0

 

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.

திருச்சி உறையூர் காவேரி நகர் 6வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57) இவர் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.

அப்பொழுது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது . இந்நிலையில் ராஜேந்திரன் கிணற்றிலிருந்து தண்ணீர் இரைக்கும் பொழுது திடீரென்று தவறி உள்ளே விழுந்து இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆனந்த சுந்தரி உறையூர் போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.