வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் இரண்டு இளம் பெண்கள் மாயம்.
திருச்சி இபி ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் காமராஜ் இவரது மகள் நந்தினி (வயது 19) இவர் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தஞ்சை சாலை பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாய் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்
. இதேபோன்று திருச்சி குமாரவயலூர் பாரதி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகள் ஹர்ஷினி (வயது 19) இவர் சிங்கார தோப்பில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாய் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.