திருச்சியில் மயங்கி விழுந்த திருநங்கை சாவு.
திருச்சி அரியமங்கலம் நாவலர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சரோ என்கிற சரவணகுமார் (வயது 27) திருநங்கையான இவர் தனது நண்பர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சரோ திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சரோ இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சரோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.