திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று கந்தர்வகோட்டை பகுதியில் தீவிரவாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .
பல கிராமங்களில் சுற்றி வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் பருக்கை விடுதி கிராமத்தில் விவசாய தொழிலாளர்கள் வயல்களில் இறங்கி வேலை செய்வதை கண்ட வேட்பாளர் தானும் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வயலில் இறங்கி நாற்று நட்டு அக்கிரம விவசாய பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார் .
அதிமுக வேட்பாளர் வயலில் இறங்கி நாட்டு நட்டு வாக்குகள் சேகரித்ததை விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்து வரவேற்றனர் . எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே என உறுதி அளித்து உள்ளனர் .
இந்த நிகழ்ச்சியின் போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் .