திருச்சி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ .
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதிமய்யச் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ.
நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் கஸ்டம்ஸ் ஆபீஸ் அருகே வழக்கறிஞர் கிஷோர் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் துறை வைக்க மரக்கன்று நட்டினர் . பின்னர் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்டார் துரை வைகோ.
இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீரங்கம் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் கருப்பையா, நம்மவர் நற்பணி இயக்க அணி அமைப்பாளர் குமார், மகளிரணி அமைப்பாளர் ஸ்ரீரங்கம் சுமதி, ராணியம்மா, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கணேஷன், ஆதிதிராவிடநல அணி மாவட்ட அமைப்பாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், நகர செயலாளர்கள் கார்த்திக், மிதுன், இளைஞரணி செயலாளர் சதீஷ்நாராயணன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வட்ட செயலாளர்கள் மகாராஜன், கனகராஜ் உள்ளிட்ட மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராசமாணிக்கம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.