திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று அவா் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமானப் பத்திரத்தில் தெரிவித்திருப்பது:
மதிமுக வேட்பாளா் துரைவைகோவிடம் கையிருப்பாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், அவரது மனைவி கீதாவிடம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம், மகன் வருண்னிடம் ரூ.2 ஆயிரத்து 500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2 ஆயிரம் உள்ளது. அவரது குடும்பத்தினா் பெயா்களில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.33 கோடியே 71லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பிலான அசையாத்துக்கள் என மொத்தம் ரூ.35 கோடியே 90லட்சத்து 84ஆயிரத்து 287 உள்ளதாகவும், ஒரு காா் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் கடன் (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள்) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
தனது மீது எந்த வழக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் ப.கருப்பையா தனது சொத்து பிரமானப் பத்திரத்தில் தெரிவித்துருப்பது: தனது பெயரிலும், மனைவி விமலா, மகன் குருநாத்பன்னீா்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயா்களில் ரூ.2 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 542 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.2கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 542 சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் அவரிடம் ரேஞ்ச்ரோவா் உள்பட 3 காா்கள், 5 டிப்பா் லாரிகள் உள்ளதாகவும், 506 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும, ரூ.3.07 கோடி கடன் உள்ளதாக தெரிவித்துள்ளாா். கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவித்துள்ளாா்.
அமமுக வேட்பாளா் ப. செந்தில்நாதன் : தனது பெயரிலும், மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோா் பெயரில் ரூ.88 லட்சத்து 31 ஆயிரத்து 187 அசையும் சொத்துக்களும், ரூ.7.30 கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். அவா்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளதாகவும், ரூ.64.08 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், 2 காா், ஒரு இருச்சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவா் மீது திருச்சி கோட்டை, தில்லைநகா் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.