Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கே.என்.நேரு மற்றும் வைகோ ஆகியோரின் மகன்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் தொடக்கம்.

0

 

திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் மதிமுக நிறுவனர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் திமுக உள்துறை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சி அல்லது தஞ்சாவூரில் முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை ( மார்ச் 23 ) திருவாரூர் செல்லும் முதல்வர், கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சி வரும் முதல்வர், விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், ‘மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில், இது நிறைவடைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.