திருச்சி மக்களவைத் தொகுதி முதலில் தேமுதிக ஒதுக்கப்பட்டு நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோரின் பிரஷரின் காரணமாக நேற்று தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளரா அறிவிக்கப்பட்டுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த 39 வயது கருப்பையா.
இவர், தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக பதவி வகித்து வருகிறார்.
பி.காம் பட்டதாரியான கருப்பையா, கறம்பக்குடி அருகேயுள்ள குழந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.
2011 முதல் கறம்பக்குடி ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராகவும், 2016 முதல் 2020 வரை ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலர் பொறுப்பை வகித்தவர்.
அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார்.
மனைவி ஆர். விமலா மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார் . இவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கருப்பையா இருவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் .
இதில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றி பெற ரங்கராஜன் குமாரமங்கலம் போன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மூலம் வட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களை சிறப்பாக கவனித்து சிறப்பாக பணியாற்ற வைத்தார் ரங்கராஜன் குமாரமங்கலம் அதே பாணியை கருப்பையா மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் . நேரடியாக மாவட்ட செயலாளரை மட்டும் பார்த்தால் வேலையாகாது .
திருச்சியில் அடைக்கலராஜை மீறி வெளியூரில் இருந்து ஒருவர் வெற்றி பெற முடியாது என கூறிய நிலையில் ரங்கராஜன் குமாரமங்கலம் இறங்கி வேலை செய்தது அவர் வெற்றி பெற்றதற்கு காரணம் .
அதேபோன்று பத்திரிகையாளர்களை அனைவரையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும்.
கறம்பக்குடியில் மட்டும் பல மக்கள் பணிகளை செய்தவர் திருச்சியிலும் தொடர வாழ்த்துக்கள்.