Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 9 வயது சிறுமி கற்பழிப்பு. திருமணமான வாலிபர் கைது .

0

'- Advertisement -

திருச்சியில்
10 வயது சிறுமி கற்பழிப்பு . வாலிபர் கைது. ஒருவர் தலைமறைவு.

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் மற்றொரு நபருடன் சேர்ந்து சிறுமியை அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதில் சிறுமிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை விடுவித்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஆனால் இந்த விவரம் தெரியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி பூப்பெய்துவிட்டதாக நினைத்து தொடர்புடைய சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Suresh

பின்னர் சிறுமியின் உடலில் நக கீறல்கள் இருந்ததையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் செய்ததுடன் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட மருத்துவ சோதனையில் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக கோட்டை அனைத்து  மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர்களை தேடிய நிலையில் 25 வயது திருமணமான வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் தலைமறைவாகி விட்டார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மகளிர் போலீசார் மற்றும் சமூக நலத்துறை,
குழந்தைகள் நல பிரிவினர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.