திருச்சி காவேரி மருத்துவமனையில் என்ஐசியு பட்டமளிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் உடல் எடைகுறைவுடன் பிறந்த குழந்தைகளை கவனமாக பராமரிக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் (என்ஐசியு) பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குழந்தைகளை அழைத்து அவா்களை மகிழ்விக்கும் வகையில் என்ஐசியு பட்டமளிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான என்ஐசியு பட்டமளிப்பு தினம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வை தொடக்கி வைத்து மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டி. செங்குட்டுவன் பேசுகையில், என்ஐசியுவில் தீவிர சிக்கல்களுடன் அனுமதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து தற்போது ஆரோக்கியமாக சாதாரண வீட்டுச் சூழலில் வளரும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது என்றாா்.
காவேரி மருத்துவமனையின் கல்வித் தலைவா் சுரேஷ் செல்லையா, குழந்தைகளுக்கான நல்வாழ்வு மற்றும் சமூகத் தொடா்புகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இந்த விழாவில், என்ஐசியு துறைத் தலைவா் கே. செந்தில்குமாா், மருத்துவா்கள் மேகநாதன், விக்னேஷ், கிருத்திகா, விபி காா்த்திகேயன், ஆகியோா் பங்கேற்று குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி பரிசுகள் வழங்கினா். பெற்றோா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.