Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொடரும் போலீசார் போன்று ஏமாற்றும் டிப் டாப் ஆசாமிகள். நடவடிக்கை எடுப்பாரா திருச்சி போலீஸ் கமிஷனர் ?

0

 

போலீஸ்காரர்கள் எனக் கூறி
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகள் கொள்ளை.

ஸ்ரீரங்கம் மேலூர் நந்தினி நகர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு டிப்டாப் ஆசாமிகள் அவரிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் இவ்வாறுவெளிப்படையாக நகை அணிந்து கொண்டு செல்கிறீர்களே என கேள்வி எழுப்பினர்.

பின்னர் நகையை கழற்றி இந்த பேப்பரில் மடித்து வைத்து வீட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினர்.
இதை அடுத்து உமா மகேஸ்வரி தான் அணிந்திருந்த 4 பவுன் எடை கொண்ட செயின் மற்றும் வளையலை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார். உடனே அந்த மர்ம நபர்கள் அந்த நகைகளை மறைத்து வைத்துவிட்டு
சிறு கற்களை வைத்து பொட்டலமாக மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

பின்னர் வீட்டிற்கு சென்று பேப்பரை அவிழ்த்து பார்த்த போது அதில் கற்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் பின்னர் இது குறித்து உமாமகேஸ்வரி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இது போன்று போலீசார் போல் டிப் டாப் ஆசாமிகள் பெண்கள் குறிப்பாக மூதாட்டிகள் இடம் ஏமாற்றி வருவது தொடர்க்கதை ஆகி வருகிறது . பெண்களும் விழிப்புணர்வுடன் இல்லை , காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுத்து யாரையும் கைது செய்தது போன்று தெரியவில்லை என்பதுதான் வேதனையான விஷயம் .

Leave A Reply

Your email address will not be published.