திருச்சி உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு சரமாரி அடி.
திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35) இவர் குடிபோதையில்
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இதை அடுத்து ராஜாராமுக்கும் அண்ணாதுரை தகராறு ஏற்பட்டது. அண்ணாதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் சேர்ந்து ராஜாராமை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது இது குறித்து ராஜாராமின் மனைவி சத்யா உறையூர் போலீஸ் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.