வளர்ச்சி அடைந்த பாரதம் மோடி நிச்சயம். பொதுமக்கள் தபால் அனுப்பும் நிகழ்ச்சியை திருச்சி பாராளுமன்ற பார்வையாளர் ஆர் ஜி ஆனந்த் தொடங்கி வைத்தார் .
திருச்சி பழைய பால் பண்ணை அருகில் உள்ள மகாலட்சுமி நகரில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் இலட்சியத்தை அடைய பாரத பிரதமர் மோடிக்கு ஆலோசனைகளை பொதுமக்கள் தபால் பெட்டியில் கடிதமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தொகுதி இணை பார்வையாளர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன், பாலக்கரை மண்டல் தலைவர் மல்லி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர் .