கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல் முறை வாக்காளர்களுடன் கலந்துரையாடிய பாஜக திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் டாக்டர் ஆனந்த்.
புதுக்கோட்டை முள்ளூரில் கிரிக்கெட் போட்டியுடன் முதல் முறை வாக்காளர்கள் சந்திப்பு.
புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, கும்முப்பட்டி கிராமம், கும்பை லிட்டில் பாய்ஸ் அணியினர் நடத்திய 25 ஆம் ஆண்டு மாபெரும் “ஒரு ஊர் கிரிக்கெட்” தொடரின் இறுதி போட்டியை துவக்கி வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக சார்பில் பரிசுகளுடன் கோப்பைகளை டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் வழங்கினார் .
இப்போட்டிகளுக்கு பின் அதே இடத்தில் வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட முதல் முறை வாக்காளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இதில் 10 ஆண்டுகளில் நாம் பாரத திருநாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் டாக்டர் ஆனந்தால் எடுத்துரைக்கப்பட்டது.