9வது தேசிய அளவிலான நடன ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய 4 வயது சிறுவன் பிரணவ்தனீஸிக்கு குவியும் பாராட்டுகள்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் நடன ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி
ஸ்ரீரங்கத்தை சார்ந்த
S.V. பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும், திருச்சி, பொன்மலை பகுதியின் பொறுப்பாளருமாகிய
எஸ்.வீரசேகரனின் பேரனுமாகிய அகோர்பத்ரன் (எ) பிரணவ்தனீஸ் நடைபெற்ற
Small dash 4 minuts -1 st place
goldmedal,
ZIGZAG skating race -1st place gold medal
solo skate dance, group skate dance உள்பட அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்று நான்கு கோல்டு மெடல், மூன்று ஷீல்டு பெற்று சாதனையுடன் திருச்சி திரும்பினார்.
தற்போது பயிற்சியாளர்கள் மகேஸ்வரி மற்றும் பூஞ்சோலை ஆகியோரின் பயிற்சியில் தமிழ்நாடு நடன ஸ்கேட்டிங் விளையாட்டு அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற ஒன்பதாவது தேசிய அளவிலான போட்டியில் பிரணவ் தனீஷ் தங்கம் வென்று மீண்டும் திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விண்ணைமுட்டும் கரகோஷத்தோடு அந்த மழலை செல்வம் பிரணவ் தனிஷை கொண்டாடியது காண்போரின் நெஞ்சத்தை மகிழச்செய்தது. மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் .