திருச்சியில் முன்னாள் தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பம் சூழ சந்திக்கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் திருச்சி தினகரன் முன்னாள் ஊழியர்கள் சங்கமம் என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்றது.
கே.பி. கந்தசாமி மற்றும் கே.பி.கே.குமரன் ஐயா ஆகியோரால் நடத்தப்பட்ட தினகரன் பத்திரிக்கையில் திருச்சி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ரபிக் முழு முயற்சி எடுத்துக் கொண்டார். இதன் பயனாக சுமார் 144 ஊழியர்களை வாட்ஸ் அப் குழுவில் ஒன்றிணைத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு ஓட்டலில் முன்னாள் ஊழியர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நிகழ்ச்சிக்கு மூத்த உறுப்பினர் ஏஜே பாஸ்கரன் தலைமை வகித்தார் . பொன்னுசாமி, நாராயணசாமி, ராஜவேல், முரசொலி ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நீண்ட ஆண்டுகளுக்கு ஒருவர் ஒருவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர் .
ஒரு சில ஊழியர்களால் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என கூறி உள்ளனர் .
உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பணி அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை எடுத்து கூறினர் .
முன்னதாக மேஜிக் அகஸ்டினின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை முன்னாள் ஊழியர்கள் எட்வின் ராஜ்குமார், அருள்ராஜ் ஆகியோர் அருமையாக தொகுத்து வழங்கினர்.
திருச்சியில் நிகழ்ச்சி நடப்பதை அறிந்து கோவையில் அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .