திருச்சி துளசி பார்மசி நடத்திய 16ம் ஆண்டு கையெழுத்துப் போட்டி . குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
துளசி பார்மசிஸ் திருச்சி கிளைகள் நடத்தும்
குடியரசு தின விழா கொண்டாட்டமாக
மாபெரும் 16 ஆம் ஆண்டு கையெழுத்துப் போட்டியானது தெப்பக்குளம் பிஷப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்த்திலிருந்து மொத்தம் 60 பள்ளிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் .
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி வெங்கட் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் துளசி பார்மசி நிர்வாக இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் , பசுபதி , சீதாராமகிருஷ்ணன் , பத்மாவதி ராஜேந்திரன், அஜிஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர் .